News November 21, 2025
‘SORRY அம்மா.. என் சாவுக்கு டீச்சர் தான் காரணம்’

ம.பி.,யில் 11-ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சோக முடிவை எடுப்பதற்கு முன் மாணவி உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், பள்ளியில் தனது டீச்சர் சித்ரவதை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், விரல்களுக்கு இடையே பேனாவை வைத்து அழுத்தி பனிஷ்மெண்ட் என கொடுமைப்படுத்தியதாக மாணவி வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Similar News
News November 24, 2025
UAN-ல் இருந்து தவறான ஐடியை நீக்க இதை செய்யுங்கள்

*Unified Member போர்ட்டலுக்குள் சென்று, உங்கள் UAN விவரங்களை உள்ளிடுங்கள்.
*Views ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
*அதில் service history-ஐ ஓபன் செய்து, அதில் தவறான member ID-ஐ கிளிக் செய்யுங்கள்.
*பின்னர் அதனை delink கொடுங்கள்.
*அதற்கான காரணத்தை உள்ளிட்டால், மொபைல் நம்பருக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு நீக்கிவிடலாம்.
*உங்கள் நிறுவனம் தவறான ECR-ஐ பதிவுசெய்திருந்தால், error என மெசேஜ் வரும்.
News November 24, 2025
MGR-க்கு ஜெயலலிதா துரோகம் செய்தார்: அமைச்சர் நாசர்

வாழையடி வாழையாக வரும் துரோகத்தின் உச்சக்கட்டமே அதிமுக என்று அமைச்சர் நாசர் விமர்சித்துள்ளார். கருணாநிதிக்கு துரோகம் செய்தவர் MGR என்ற அவர், MGR-க்கு துரோகம் செய்தவர் ஜெயலலிதா என கூறினார். ஜெ.,க்கு சசிகலாவும், சசிகலாவுக்கு EPS-ம் துரோகம் செய்தனர் என்றும் அவர் தெரிவித்தார். தன்னை முன்னிலைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் அதிமுகவினர், அவர்களது கட்சியை வளர்த்தெடுத்தவர்களை விட்டுவிடுகின்றனர் என்றார்.
News November 24, 2025
BREAKING: 5 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

கனமழை எச்சரிக்கையால் 5-வது மாவட்டமாக திருவாரூருக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்காசி, நெல்லை ஆகிய 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


