News April 25, 2024
பங்குச்சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம்

பங்குச்சந்தையில் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. அவர்கள் 100 வயது விதியை பயன்படுத்த வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது 100இல் உங்கள் வயதை கழித்தால் மீதம் கிடைக்கும் எண்ணின் விகிதத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். உதாரணமாக 20 வயதுடையவர்கள் 80% பங்குச்சந்தையிலும், மீதி 20%ஐ தங்கம், கடன் பத்திரம், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.
Similar News
News November 13, 2025
அண்ணாமலை போல் நயினாருக்கும்.. சேகர்பாபு

தனது பதவிக்காலம் முடிய 2.5 ஆண்டுகள் இருக்கிறது, ஆனால் அவருக்கு (சேகர்பாபு) 2 மாதங்களே உள்ளதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்திருந்தார். இந்நிலையில், 2024 லோக்சபா தேர்தல் முடிந்ததும், அண்ணாமலைக்கு எப்படி பாஜகவினர் அரோகரா போட்டார்களோ, அதேபோல், 2026 தேர்தல் முடிந்ததும் நயினாரின் பதவியை பறிக்க டெல்லி பேக் செய்யும் என்று சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
News November 13, 2025
சாப்பிட்டு முடிச்சதும் இத கண்டிப்பா குடிங்க!

சாப்பிட்டு முடித்ததும் வெறும் தண்ணீரை குடிப்பதை விட, சீரகம் போட்டு கொதிக்க வைத்த நீரை குடித்தால் உடலுக்கு ஆரோக்கியம் என டாக்டர்கள் கூறுகின்றனர். காரணம் *சீரக நீர் ஜீரணத்தை தூண்டுகிறது *வாயு தொல்லை, வயிறு உப்புசத்தை குறைக்கும் *சாப்பிட்ட பின் சீரக நீர் குடிப்பதை தொடர்ந்து செய்து வந்தால் ரத்த அழுத்தம் சீராகும் *உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும் *வாயை புத்துணர்ச்சியோடு வைத்து கொள்ள உதவுகிறது.
News November 13, 2025
விஜய் அண்ணா என்னை மன்னித்து விடுங்கள்

விஜய் அண்ணா என்னை மன்னித்துவிடுங்கள் என்று வீரலட்சுமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். உங்களை (விஜய்) அரசியல், கருத்தியல் ரீதியாக விமர்சனம் செய்வதில் தவறில்லை. ஆனால், அந்த விமர்சனத்தில் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒருமையில் பேசியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் ரசிகை ஒருவர் எனது கண்முன்னே இறந்ததை பார்த்த ஆத்திரத்தில் அவ்வாறு பேசினேன் என விளக்கமளித்துள்ளார்.


