News April 25, 2024
ஆற்று படுகையில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலி

கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்த பெருமாள் கோவில் பதி பகுதியில் உள்ள ஆற்று படுகையில் இன்று (ஏப்.24) குளிக்க சென்ற பிரவீன் (17). கவின் (16), தர்ஷன் (17) ஆகிய 3 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 3 பேர் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 27, 2025
கோவை: 10-ம் வகுப்பு போதும்.. பயிற்சியுடன் ரூ.6,000!

கோவை மக்களே 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களா நீங்கள்? தமிழ்நாட்டில் ரயில்வேயில் தொழிற்பயிற்சி பெற வாய்ப்பு அமைந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 3,518 பயிற்சி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதற்கு மாதம் ரூ.6,000 (10th), ரூ.7,000 (12th, ITI) உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 27, 2025
கோவையில் ஹாயாக சுற்றுலா செல்ல ஏற்ற இடம்!

இயற்கை எழில் மிகுந்த பரளிக்காடு கோவை காந்திபுரத்தில் இருந்து 70 கிமீ தொலைவிலும், காரமடையில் இருந்து 30 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. சனி மற்றும் ஞாயிறு மட்டுமே https:// Coimbatorewilderness.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். காரமடை வனத்துறையினரால் நடத்தப்படும் இந்த சுற்றுலாவில் பழங்குடியினரின் நடன நிகழ்ச்சியும் அடுத்த மாதம் முதல் துவங்க உள்ளது.
News August 27, 2025
கோவை:இலவச வீட்டு மனை வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக வீட்டுமனை பெறலாம்.இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்து மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!