News November 21, 2025
மண்டபம் அருகே சுத்தியலால் தாக்கி இலங்கை அகதி கொலை

மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும், இலங்கை மன்னாரை சேர்ந்த கவிராஜ், 27; மலைச்செல்வம், 35; மணிகண்டன், 32, ஆகியோர் நேற்று முன் தினம் அப்பகுதியில் மது அருந்தினர்.அப்போது,ஏற்பட்ட தகராறில் மலைச்செல்வம், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து வந்து கவிராஜை தாக்கி தப்பினார். காயமடைந்த கவிராஜ், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை இறந்தார்.
Similar News
News November 21, 2025
ராம்நாடு: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

ராம்நாடு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே<
News November 21, 2025
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

வங்கக்கடலில் நாளை (நவ. 22) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது அடுத்த 48 மணிநேரத்தில் வலுப்பெற உள்ளதால் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நாளை (நவ. 22) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கால பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 21, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதி

வங்க கடலில் காற்றின் வேகம் குறைந்துள்ளதால் ராமேஸ்வரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடிக்க வேண்டும். மீனவர் அடையாள அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


