News April 25, 2024
KKR அணியில் இருந்ததை எண்ணி வருந்திய குல்தீப்

2016 – 2020 வரை KKR அணிக்காக விளையாடியதை நினைத்து தான் தற்போது வருந்துவதாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கொல்கத்தா அணியில் ஆடிய காலத்தில் எனக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டது. ஆனால், அறிவுரைக் கூறத்தான் ஆளில்லை. தோனிக்கு பிறகு யாருமே என்னை வழிநடத்தவில்லை. அப்போது எனக்கு ஆதரவு வழங்காமல் மோசமாக நடத்தி, KKR அணி கழற்றிவிட்டதாகக் கூறினார்.
Similar News
News January 23, 2026
இதெல்லாம் பண்றீங்களா? கிட்னி ஸ்டோன் வரும்!

உட்கார்ந்தே இருப்பது, தண்ணீர் அருந்துவதையே மறப்பது, நைட் ஷிஃப்டில் பணிபுரிவதால் கிட்னி ஸ்டோன் உருவாகும் ஆபத்து பகல்நேரம் பணிபுரிபவர்களை விட 15% அதிகமாகும் என ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இதனை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். நைட் ஷிஃப்ட் பார்ப்பவர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
News January 23, 2026
திமுகவின் முயற்சி கைகூடுமா?

திமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு திருமா தரப்பு சுணக்கம் காட்டிவருகிறதாம். இதனால் விசிகவை சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுகவும் ராமதாஸ் தரப்பும் இறங்கியிருப்பதாக சொல்கிறார்கள். வரும் தேர்தலை எதிர்கொள்ள பல கட்சிகளின் கூட்டணி அவசியம் என திமுக கருதுவதால் விசிக இம்முடிவுக்கு மனமிறங்கி வருமா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.
News January 23, 2026
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: செங்கோட்டையன்

தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் தங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள் என கெஞ்சி கொண்டிருப்பதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆனால், விஜய் தனித்தே நிற்பார், இருப்பினும் நல்ல கூட்டணி அமையும் என நம்பிக்கை தெரிவித்த அவர், 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி அடைவோம் என்றார். தவெகவுக்கு நேற்று விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


