News April 25, 2024

ஆட்சியரிடம் மனு அளித்த குமரி மீனவர்கள்

image

புயல், கடல் சீற்றம் போன்ற வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் எச்சரிக்கை தகவல்களை ஆழ்கடலில் பல நாட்கள் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வரும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசி சிம்கார்டு ரீசார்ஜ் வசதியை அரசு நிறுத்தி உள்ளதால் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் எங்கள் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக வள்ளவிளை மீனவர்கள் இன்று ஏப்-24 ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Similar News

News August 15, 2025

குமரியில் விநாயகர் சிலைகளை 10 இடங்களில் கரைக்கலாம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் கன்னியாகுமரி, சொத்த விளை, சின்ன விளை, சங்குத்துறை, வெட்டுமடை, தேங்காய்ப்பட்டணம், மிடாலம் கடற்கரைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் பள்ளிக்கோணம், அணைக்கட்டு, திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆறு போன்ற இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அரசு அனுமதித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 15, 2025

குமரி இளைஞர்களே, அரசு இலவச பயிற்சி.. வேலை ரெடி!

image

குமரி இளைஞர்களே, தமிழக அரசு வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் 8-வது முதல் டிகிரி வரை எந்த படிப்பு முடித்திருந்தாலும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை உறுதி செய்து வருகிறது. TN Skill என்ற இணையதளத்திற்கு சென்று ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் முதல் ஐடி துறை வரை பல்வேறு பயிற்சிகளை தேர்வு செய்து கொள்ளலாம். பெரும்பாலான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பை உறுதி செய்யும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

News August 15, 2025

பாலமோரில் 22.4 மில்லி மீட்டர் மழை பதிவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 22.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குழித்துறையில் 21.2 மி.மீ, பேச்சிப்பாறை 19.8 மி.மீ, ஆனைக்கிடங்கு 17.2 மி.மீ, சுருளோடு 16.4 மி.மீ, திற்பரப்பு 14.8 மி.மீ, சிற்றாறு ஒன்று 14.4 மி.மீ, சிவலோகம் 14.2 மி.மீ, பெருஞ்சாணி 13.8 மி.மீ, புத்தன் அணை 11.2 மி.மீ, களியலில் 10.2 மி.மீ.மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!