News November 21, 2025

ஈரோடு: சிறுமிக்கு பாலியல் தொல்லை – 7 ஆண்டு சிறை!

image

ஈரோடு, சித்தோடு கொங்கம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (69). 8.7.2024 அன்று கோவிலுக்கு வந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அக்கம்பக்கத்தினர் கண்டு சிறுமியை மீட்டு பவானி மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் அவரை கைது செய்தனர். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி சொர்ணகுமார் சுப்பிரமணிக்கு 7 ஆண்டு சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்ததுடன், சிறுமிக்கு ரூ.3 லட்சம் நஷ்டஈடு வழங்க பரிந்துரைத்தார்.

Similar News

News November 21, 2025

கோபி அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

image

கோபி மதுவிலக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாரதி தலைமையிலான காவல்துறையினர் கவுந்தப்பாடி ஆலத்தூர் பாலக்காட்டூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (50) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News November 21, 2025

ஈரோடு: வாலிபர் தூக்குமாட்டி தற்கொலை

image

ஈரோடு பெரியவலசு துரைசாமி வீதியை சேர்ந்தவர் கார்த்தி (30). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் கார்த்தி அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்தபோது கார்த்தி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஈரோடு வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 21, 2025

ஈரோடு மக்களே இலவச தையல் மெஷின் வேண்டுமா?

image

ஈரோடு மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு.
1. இங்கு <>கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

error: Content is protected !!