News April 25, 2024
கடலூர்: கொலை வழக்கு.. காவல்துறை அறிக்கை

கடலூர், ஸ்ரீமுஷ்ணத்தில் கடந்த 19ம் தேதி கோமதி என்பவர் கொலை வழக்கில், கைதானவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்திலும் வழக்கு தொடர்ந்ததால் நேற்று மேலும் 3 பேர் கைது எனவும் காவல்துறை அறிக்கை வெளியிட்டது. 2021ல் ஏற்பட்ட தகராறு தொடர்பாகவே தற்போது கோமதி மரணம் நடந்துள்ளது என அவரின் குடும்பத்தினரே தெரிவித்துள்ளனர். இதுதவிர வேறு எந்தக் காரணமும் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 19, 2026
கடலூர்: இனி Gpay, Phonepe தேவையில்லை!

கடலூர் மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க.
News January 19, 2026
கடலூர்: ரூ.25 கோடிக்கு விற்பனை – புதிய உச்சம்!

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை விமர்சியாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 135 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் ஜனவரி 14,15 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களில் மட்டும், ரூ.25.29 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட 2 கோடியே 46 லட்சம் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆண்டுதோறும் புதிய உச்சம் தொடும் மது விற்பனை கடலூர் மாவட்ட மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
News January 19, 2026
கடலூர்: நடந்து சென்றவர் மீது பைக் மோதி சாவு

கீரப்பாளையம் மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் குருசாமி (63) நேற்று கீரப்பாளையத்தில் இருந்து புவனகிரி நோக்கி வெள்ளாற்று பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக் மோதியதில், பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பைக் ஓட்டிய வினோத் குமார் (25) என்பவர் மீது புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


