News April 25, 2024
நாசரேத் பள்ளியில் கால்பந்து பயிற்சி

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் இலவச கால்பந்து பயிற்சி முகாம் வருகின்ற 01.05.2024 முதல் 10.05.2024 வரை நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி கால்பந்து மைதானத்தில் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கால்பந்து பயிற்சி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 15, 2026
தூத்துக்குடி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000…!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT
News January 15, 2026
தூத்துக்குடி: அரிவாளுடன் பிரபல ரவுடி கைது

முறப்பநாடு போலீசார் நேற்று மணக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி பார்வதி நாதன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவரிடம் மிகப்பெரிய அரிவாள் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 15, 2026
தூத்துக்குடி: ரகசிய தகவலால் 13 பேர் கூண்டோடு கைது

குலசை காவல்ஆய்வாளர் பிரபு பாஸ்கர் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கல்லாமொழி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு தூத்துக்குடியைச் சேர்ந்த 13 நபர்கள் சேர்ந்து சட்டவிரோதமாக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து. 13 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார் 3,67,000 ரொக்கம், சீட்டுக் கட்டுகள் மற்றும் 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தார்.


