News April 25, 2024

பழமை வாய்ந்த திண்டல் முருகன் கோவில்

image

திண்டல் முருகன் கோவில், ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்லும் வழியில் 60 மீட்டர் உயரத்தில் உள்ள மலைக்குன்றில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று. கொங்கு நாட்டு ஆலய அமைப்பில், தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாக இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ரச மரத்து விநாயகர் நாகர் படை சூழ அமர்ந்திருப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

Similar News

News February 5, 2026

ஈரோட்டில் தட்டி தூக்கிய போலீஸ்: இருவர் கைது!

image

பங்களாப்புதூர் அருகே கட்டிடத்து பிள்ளையார் கோவில் வீதியில், உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த சகிப் (25) மற்றும் முகமது நயும் சர்கார் (19) ஆகிய இருவரைப் போலீசார் கண்டறிந்தனர். ரகசியத் தகவலின் பேரில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் சேலத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

News February 5, 2026

கொடுமுடி அருகே சோகம்: தொழிலாளி விபரீத முடிவு!

image

சேலம் மாவட்டம் மேட்டூர் தெர்மல்நகரை சேர்ந்த ரமேஷ்குமார் 45 என்பவர், தனது மனைவியுடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆரம்பாளையம் அம்பேத்கர்நகரில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு ரமேஷ்குமார் உடலில் தின்னரை ஊற்றி தீ வைத்து கொண்டார். பின்னர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது சிகிச்சை பலனின்றி இறந்தார். கொடுமுடி காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

News February 5, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் “இருவார கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்” வரும் 14/02/2026 வரை நடைபெற உள்ளது. எனவே மக்கள் அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் உங்கள் கோழிகளை 3 மாதங்களுக்கு ஒருமுறையும், அதிகபட்சமாக 6 மாதத்திற்குள்ளும் தடுப்பூசி செலுத்தி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி,தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!