News November 20, 2025

மீஞ்சூர் அருகே வெட்டிப் படுகொலை!

image

திருவள்ளூர்: தோட்டக்காடு மேட்டுமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்(25). அவரது ஊரில் சுடுகாட்டுப் பகுதியில் முட்புதரில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்து அங்குள்ள தேங்கிய மழை நீரில்
அவரது உடலை வீசி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இறந்த நிலையில் உடல் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் மீஞ்சூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 24, 2025

திருவள்ளூர்: ரீல்ஸ் செய்த வாலிபர் கைது!

image

பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில், பட்டா கத்தியுடன் ‘ரீல்ஸ்’ எடுத்துக் கொண்டிருந்த இளைஞர் ராஜதுரை (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். பள்ளிப்பட்டு தாலுகா நொச்சி தலையாரி காலனியைச் சேர்ந்த இவர், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், விரைந்து வந்த பொதட்டூர் எஸ்.ஐ. தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.

News November 24, 2025

திருவள்ளூர்: 13 வயது சிறுவன் துடிதுடித்து பலி!

image

ஆவடியில் ஹரிஹரன் (13) என்ற சிறுவனின் வீட்டுக்கு வந்திருந்த உறவினரின் குழந்தைக்காக தூளி கட்டப்பட்டுள்ள நிலையில், உறவினர் ஊருக்குச் சென்ற பிறகும், ஹரிஹரன் அந்தத் தூளியில் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். இதனால் பெற்றோரும் தூளியை அகற்றாமல் விட்டுள்ளனர். நேற்று முன்தினம் பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் வழக்கம்போல் ஹரிஹரன் தூளியில் சுற்றி விளையாடும்போது, கழுத்து இறுக்கி உயிரிழந்தார்.

News November 24, 2025

தேசிய வில்வித்தை போட்டி பொன்னேரி மாணவி சாதனை

image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 7 ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வெனிசா ஸ்ரீ. கடந்த மூன்று நாட்களாக உத்தர பிரதேஷ் மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வரும் 69ஆவது எஸ் ஜி எஃப் ஐ தேசிய பள்ளிகள் விளையாட்டு வில் வித்தை போட்டியில் காம்பவுண்ட் போ பிரிவில் 14 வயதுக்குட்பட்டவர்க்கான பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்துள்ளார்.

error: Content is protected !!