News November 20, 2025
கள்ளக்குறிச்சி: மன உளைச்சலால் கிராம உதவியாளர் தற்கொலை!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வருவாய் குறுவட்டத்திற்குட்பட்ட, சிவனார்தாங்கள் கிராம உதவியாளராக பணி புரிந்து வந்த ஜாகிதா பேகம் என்பவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி இன்று (நவ.20) தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின், பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அப்பகுதி காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
கள்ளக்குறிச்சியில் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்!

கள்ளக்குறிச்சியில் நேற்று இரவு முதல் பெய்துவரும் கன மழையின் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (24.11.2025) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் அறிவித்துள்ளார். மேலும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
BREAKING: கள்ளக்குறிச்சி பள்ளிகளுக்கு விடுமுறை!

புயலின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது, இந்த மழையின் காரணமாக ஏற்கெனவே தூத்துக்குடி, ராமநாதபுரம் உட்பட மாவட்டங்களுக்கு விடுமுறை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.24) விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணியின் காவலர் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.23) இரவு முதல் இன்று (நவ.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


