News November 20, 2025

கள்ளக்குறிச்சி: மன உளைச்சலால் கிராம உதவியாளர் தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வருவாய் குறுவட்டத்திற்குட்பட்ட, சிவனார்தாங்கள் கிராம உதவியாளராக பணி புரிந்து வந்த ஜாகிதா பேகம் என்பவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி இன்று (நவ.20) தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின், பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அப்பகுதி காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 28, 2025

கள்ளக்குறிச்சி: காவல்நிலையம் முன்பு திரண்ட கிராமம்!

image

கள்ளக்குறிச்சி: மேல்சிறுவள்ளூரை சேர்ந்த இளைஞர்கள் நேற்று (நவ.27) மாலை மூங்கில்துறைப்பட்டு இளைஞர்களை தாக்கியுள்ளனர். இதையறிந்த மூங்கில்துறைப்பட்டு காவலர்கள், இருதரப்பு இளைஞர்களையும் அழைத்து வந்து பேசிக்கொண்டிருக்கையில், மூங்கில்துறைப்பட்டு கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு காவல்நிலையத்திற்கு வந்தனர். மேல்சிறுவள்ளூர் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவலர்கள் தெரிவித்த பின்னர் கலைந்தனர்.

News November 27, 2025

சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளை நேரில் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநாவலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்பு தீவிர திருத்தம் பணியை நேரில் ஆட்சியர் பிரசாந்த் ஆய்வு செய்தார். கணக்கீட்டு படிவங்களை சேகரித்து செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ 27)நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News November 27, 2025

சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம்,79-சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்புத் தீவிரத் திருத்தம்(SIR) பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.இதில் கணக்கீட்டுப் படிவங்களை சேகரித்து BLO Mobile App-ல் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (நவ.27) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

error: Content is protected !!