News November 20, 2025
தோவாளை மலர் சந்தையில் மல்லி ரூ.1400 ஆக உயர்வு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.1400 ஆக விலை உயர்ந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கிலோ ரூ.10000 மாக இருந்த நிலையில் இன்று மேலும் மல்லிகைப்பூ விலை உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு இருப்பதால் மல்லிகை பூ உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து பாதித்துள்ளது. இவனைத் தொடர்ந்து மல்லிகை பூ விலை உயர்ந்துள்ளது.
Similar News
News November 24, 2025
குமரி மக்களே இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.குமரி – 04652-278035
2.அகஸ்தீஸ்வரம் – 04652-233167
3.தோவாளை- 04652-282224
4.கல்குளம்- 04651-250724
5.விளவங்கோடு- 04651-260232
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News November 24, 2025
குமரி: புலிகள் நடமாட்டம்? வனத்துறை அறிவிப்பு

திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட சேக்கல், பிலாங்காலவிளை பகுதிகளில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக வதந்தி பரவியது. இதையடுத்து குலசேகரம் வனச்சரக அலுவலர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது; இங்குள்ள கால்தடங்களை பார்க்கும்போது காட்டுப்பன்றியின் கால்தடம் போல் தெரிகிறது. புலி நடமாட்டம் இருப்பதாக மக்கள் அச்சப்பட தேவையில்லை. இரவில் மக்கள் கவனமாக நடமாடவேண்டும். என கூறினர்.
News November 24, 2025
குமரி மீனவர்களுக்கு இந்திய வானிலை மையம் அறிவிப்பு

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 ஆம் தேதி உருவாகும் .
இதனால் குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆழ் கடல் மீன் பிடிப்பவர்கள் உடனே திரும்பவும் மீன் பிடிக்கும் உபகரணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


