News November 20, 2025
காரைக்கால் மருத்துவமனை முன்பு சாலை மறியல்

காரைக்காலில் விழிதியூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா என்கின்ற நபர் நேற்று சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த கருப்பையா மீது காரைக்கால் போக்குவரத்து போலீசார் அதிவேகமாக வந்ததாகவும், அவர் மது அருந்திவிட்டு வந்ததாகவும் பொய்யான வழக்கை பதிவு செய்ததை கண்டித்து,, உயிரிழந்த கருப்பையா உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் காரைக்கால் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News November 21, 2025
காரைக்காலுக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை!

புதுவை ஜிப்மர் சிறப்பு மருத்துவர்கள் சனிக்கிழமை (22.11.2025) அன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, வயிறு குடல் அறுவை சிகிச்சை (Medical and surgical gastroentrology) சம்பந்தமாக மருத்துவர் குழு காரைக்கால் மருத்துவமனைக்கு வருகை புரிந்து, பொது மக்களுக்கு சிகிச்சை ஆலோசனைகள் வழங்க உள்ளார்கள். இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் தங்களை கேட்டு கொள்கிறது.
News November 21, 2025
காரைக்காலுக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை!

புதுவை ஜிப்மர் சிறப்பு மருத்துவர்கள் சனிக்கிழமை (22.11.2025) அன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, வயிறு குடல் அறுவை சிகிச்சை (Medical and surgical gastroentrology) சம்பந்தமாக மருத்துவர் குழு காரைக்கால் மருத்துவமனைக்கு வருகை புரிந்து, பொது மக்களுக்கு சிகிச்சை ஆலோசனைகள் வழங்க உள்ளார்கள். இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் தங்களை கேட்டு கொள்கிறது.
News November 21, 2025
புதுவை: ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது

புதுவையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எஸ்.எஸ்.பி. கலைவாணன் தலைமை தாங்கி பேசினார். அதில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும், கல்வி நிலையங்கள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் மற்றும் ரவுடிகள், போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை குண்டர் குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என பேசினார்.


