News April 25, 2024

இந்திரா காந்தி மட்டும் நகையைக் கொடுக்கவில்லை

image

நாட்டிற்காக இந்திரா காந்தி மட்டுமே நகைகளைக் கொடுக்கவில்லை, மக்கள் அனைவருமே நகைகளைக் கொடுத்தனர் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்தியா – சீனா போர் (1962) நடந்த சமயத்தில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது நகைகளைக் கொடுத்ததாக காங்கிரசார் கூறி வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, போர் ஏற்பட்டதற்கு காரணமே நேருதான். காங்கிரசார் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Similar News

News January 13, 2026

தமிழ்நாட்டில் பொங்கல்.. பிற மாநிலங்களில் என்ன பெயர்?

image

இந்தியாவில், சூரியன் மகர ராசிக்குள் நுழைவதையும், அறுவடை திருநாளையும் மகர சங்கராந்தி என்ற பெயரில் மக்கள் கொண்டாடுகின்றனர். இது, நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களிலும், மரபுகளிலும் கொண்டாடப்படுகிறது. எந்தெந்த மாநிலங்களில் என்ன பெயர்களில் கொண்டாடப்படுகிறது என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News January 13, 2026

மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. மகிழ்ச்சியான செய்தி

image

மகளிர் உரிமைத் தொகை ₹1,000 உயர்த்தப்படும் என CM ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனிடையே, பொங்கலுக்கு முன்பாக மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியிருந்தார். இந்நிலையில், வழக்கமாக உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் நாள் அன்றோ (ஜன.15) (அ) நாளையோ தொகை உயர்வு பற்றிய அறிவிப்பை CM வெளியிடுவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரெடியா?

News January 13, 2026

மோடி முன்னிலையில் ஜி.வி.பிரகாஷ் பாடல் ரிலீஸ்!

image

டெல்லியில் PM மோடி முன்னிலையில் திருவாசகத்தின் முதல் பாடலை தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நாளை இசைக்க உள்ளார். மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நாளை நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கும் ஜிவி பிரகாஷ் தனது இசை கச்சேரியில் இதனை நிகழ்த்த உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏழை தாயின் மகன் என்ற மோடியின் 75வது பிறந்தநாள் பாடலுக்கு அவர் இசையமைத்திருந்தது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!