News April 25, 2024
இந்திரா காந்தி மட்டும் நகையைக் கொடுக்கவில்லை

நாட்டிற்காக இந்திரா காந்தி மட்டுமே நகைகளைக் கொடுக்கவில்லை, மக்கள் அனைவருமே நகைகளைக் கொடுத்தனர் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்தியா – சீனா போர் (1962) நடந்த சமயத்தில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது நகைகளைக் கொடுத்ததாக காங்கிரசார் கூறி வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, போர் ஏற்பட்டதற்கு காரணமே நேருதான். காங்கிரசார் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Similar News
News January 14, 2026
இன்று தவறவிட்டால் கோலியால் வரலாறு படைக்க முடியாது!

கடைசியாக நடந்த 5 ODI போட்டிகளிலும் கோலி 50+ ரன்களை அடித்துள்ளார். இந்நிலையில், இன்றையை NZ-க்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தால், தொடர்ச்சியாக 6 ODI-களில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைப்பார். தற்போது சச்சின், டிராவிட், ரோஹித், ரஹானே ஆகியோருக்கு நிகராக கோலி இருக்கிறார். இந்த பட்டியலில் 9 முறை 50+ ரன்களை அடித்து PAK வீரர் ஜாவித் மியாண்டாட் முதலிடத்தில் உள்ளார்.
News January 14, 2026
அண்ணாமலைக்கு துணையாக ஓடோடி வந்த சீமான்

<<18833393>>அண்ணாமலை<<>> மும்பைக்கு வந்தால் கால்களை வெட்டுவேன் என ராஜ்தாக்கரே கூறியதை சீமான் கண்டித்துள்ளார். கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு பதிலாக கால்களை வெட்டுவேன் என கூறுவதை ஏற்க முடியாது எனவும், அண்ணாமலை தனி நபரல்ல, தமிழ்த்தேசிய இனத்தின் மகன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அரசியல், கொள்கை, கோட்பாடு அனைத்தையும் கடந்து தமிழ் இனத்தின் மகனாக அவருக்கு துணை நிற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
News January 14, 2026
அறுவடை திருநாளை அன்புடன் வரவேற்போம் ❤️❤️

தமிழர்களின் பண்பாட்டு பெருவிழாவான பொங்கல் பண்டிகையை வரவேற்கும் திருநாளாக போகி பண்டிகை உள்ளது. பழையன கழிதலும், புதியன புகுதலுமாக நமது முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ள இத்திருநாளில், பழைய துன்பங்கள் நீங்கி, புதிய தொடக்கத்தை தொடங்க Way2News வாசகர்களை வாழ்த்துகிறோம். அறுவடை திருநாளின் ஆரம்ப நாளில் அன்பு, சகோதரத்துவம், மனிதநேயம் பொங்கும் பொங்கலை வரவேற்போமாக.


