News April 25, 2024
இந்திரா காந்தி மட்டும் நகையைக் கொடுக்கவில்லை

நாட்டிற்காக இந்திரா காந்தி மட்டுமே நகைகளைக் கொடுக்கவில்லை, மக்கள் அனைவருமே நகைகளைக் கொடுத்தனர் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்தியா – சீனா போர் (1962) நடந்த சமயத்தில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது நகைகளைக் கொடுத்ததாக காங்கிரசார் கூறி வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, போர் ஏற்பட்டதற்கு காரணமே நேருதான். காங்கிரசார் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Similar News
News January 14, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஜன.13) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News January 14, 2026
ராசி பலன்கள் (14.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 14, 2026
₹1,000 வழங்காமல் ஏமாற்றும் திமுக அரசு: நயினார்

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போரை கடந்த நான்கரை வருடங்களாக திமுக அரசு வஞ்சித்து வருவதாக நயினார் சாடியுள்ளார். தனது X பதிவில், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதம் ₹1,000 வழங்கப்படும் என்ற திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாட்டுப் பொங்கலுக்கு இன்னும் 3 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த மாதமாவது அந்த தொகையை திமுக அரசு கண்ணில் காட்டுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


