News April 25, 2024

அவர்தான் மிகப்பெரிய ஊழல்வாதி

image

தேர்தல் பத்திரங்கள் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி பாஜகவுக்கு நன்கொடைகளைப் பெற்ற மோடி ஊழலை ஒழிப்பாரா என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பெங்களூருவில் பேசிய அவர், ₹150 கோடி லாபத்தை அடையாத நிறுவனம் ₹1,100 கோடி நன்கொடை வழங்குகிறது. இடி, ஐடி மூலம் மிரட்டிப் பெற்ற இந்தத் தொகை குறித்து பதில் சொல்லாமல் கவனத்தை திசை திருப்புகிறார். அவர்தான் மிகப்பெரிய ஊழல்வாதி என விமர்சித்துள்ளார்.

Similar News

News September 23, 2025

அக். 14-ல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

image

அக்.14-ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். முதல்நாளில், மறைந்த முன்னாள் MLA-க்கள் 8 பேர் & வால்பாறை MLA-வுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது. மேலும், 2025-26 கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. எத்தனை நாள்கள் கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து ஆய்வுக்குழுவில் முடிவெடுக்கப்படும் என அப்பாவு தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

மகளிர் உரிமைத் தொகை.. வந்தது ஹேப்பி நியூஸ்

image

குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாள்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை பெற்றவர்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதில் தகுதியான பெண்களுக்கு ₹1000 வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

திமுக MPக்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக MP-க்களின் ஆலோசனைக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியுள்ளது. வாக்குத் திருட்டு புகார் தொடர்பாக போராட்டம் நடத்துவது, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

error: Content is protected !!