News November 20, 2025
காஞ்சிபுரத்தில் தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் எண்!

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 21, 2025
காஞ்சி: 7 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை!

காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் சேந்தமங்கலத்தை சேரந்தவர் ராணி (70) கடந்த 12ஆம் தேதி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முட்புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து விசாரித்த சுங்குவார்சத்திரம் போலீசார், பாப்பாங்குலி கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் 7 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்ய 4 மாதங்களாக திட்டமிட்டுள்ளார் என தெரியவந்தது.
News November 21, 2025
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம்!

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் வரும் 21.11.2025 அன்று 9.30 முதல் 3.00 மணி வரை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது!
தகுதி: 8-ம் வகுப்பு, 10th, 12th, ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
வேலை தேடுபவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திட www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தை அணுகவும்.
News November 21, 2025
காஞ்சி: மீன் பிடிக்க சென்றவர் ஏரியில் மூழ்கி பரிதாப பலி!

காஞ்சிபுரம், படப்பை, துலகானத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (50) இவர் நேற்று (நவ.20) ரஜினி, மாரிமுத்து ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள ஏரியில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது சங்கர் ஏரியில் மூழ்கி மாயமானார். அவரை மீட்க சென்ற ரஜினி, மாரிமுத்து ஆகியோரும் ஏரியின் நடுவில் சிக்க, அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவலளித்தனர். அவர்கள் சங்கர் உடலை மீட்டு இருவரையும் காப்பாற்றினார்.


