News April 25, 2024
கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் வழிபாடு

மழை பெய்து வெப்பம் தணிவதற்காகவும், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கவும், விவசாயிகள் நலன் காக்கவும், நாடு செழிக்கவும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கருங்கல்பாளையம் காவேரிக்கரையில் சிவாச்சாரியார்கள்,வருணபகவானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். 21 சிவாச்சாரியார்கள் காவிரிக்கரை படித்துறையில் அமர்ந்து பூஜை செய்தனர். பிறகு காவிரி ஆற்றில் ஒரு மணி நேரம் சிவாச்சாரியார்கள் இறங்கி ஜெபித்தனர்.
Similar News
News May 8, 2025
ஈரோடு மக்களுக்கு முக்கிய எண்கள்

▶️ ஈரோடு கலெக்டர்- 0424-2262444. ▶️காவல்துறை கண்காணிப்பாளர்-0424-2260100 ▶️ ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் 0424-2258312▶️ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் 0424-2260455 ▶️மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்-0424-2252052 ▶️மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் 0424-2260255. இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க
News May 7, 2025
ஈரோடு: மனைவியை கொன்று நாடகம் ஆடிய கணவர்

பெருந்துறை அருகே விஜயமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் ராஜ்(40). இவர் சம்பவத்தன்று மனைவி ஜானகியை கட்டையால் அடித்து கொன்று விட்டு நாடகம் ஆடினார். இந்த கொலையை விசாரித்த பெருந்துறை போலீசார், பிரேத பரிசோதனை அடிப்படையில் கணேஷ்ராஜ் கட்டையால் அடித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இந்த உண்மையை ஒத்துக் கொண்ட கணேஷ் ராஜை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News May 7, 2025
ஈரோடு: முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

ஈரோடு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தொடர்பு எண்கள் ஈரோடு- 0424-2268087, ஈரோடு நகரம்-04242269100, பவானி-04256-230200, சத்தியமங்கலம்-04295-222226, பெருந்துறை-04294-222343, கோபி- 04285222027 உங்கள் பகுதியில் உள்ள காவல்துறைக்கு புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க