News November 20, 2025

சென்னை: ரயில்வேயில் 3,000 காலி இடங்கள்- APPLY HERE!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் 3,058 NTPC காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 19,000 முதல் 21,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. மேலும் விருப்பமுள்ளவர்கள் நவம்பர்-27க்குள் <>இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். ரயில்வே வேலை தேடுவோருக்கு ஷேர்.

Similar News

News November 22, 2025

சென்னை: செல்லப் பிராணிகள் வளர்போர் கவனத்திற்கு!

image

சென்னையில் தெருநாய்கள், நாய், பூனை ஆகிய செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதை தடுக்க, ‘மைக்ரோ சிப்’ பொருத்துவது கட்டாயம். இதற்கான பணிகள், மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களில், கடந்த அக்.8 முதல் இலவசமாக செய்யப்பட்டு வருகின்றன. நவ.23க்குள் உரிமம் பெறாவிட்டால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அவகாசம், டிச.7 வரை 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

News November 22, 2025

சென்னை: அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு

image

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் சில அத்தியாவசிய மருந்துகள் தற்காலிகமாக கிடைக்காமல் உள்ளன. மாநில மருத்துவ சேவை அமைப்பு சில மருந்துகளின் வழங்கலை நிறுத்தியதால், மருத்துவமனைகள் தற்போது அவசியமான மருந்துகளை தனியார் விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் மருந்து பெறுவதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளதால், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News November 22, 2025

சென்னையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

image

சென்னை கொளத்தூர் சேர்ந்த 23 வயது பெண், கடந்த 19ம் தேதியன்று இரவு புழல் செக்ரடேரியட் காலனி பகுதியில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பினார். புகாரின் பேரில் M-3 புழல் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. சிசிடிவி பதிவுகள் மூலம் 15 வயது சிறுவனை கைது செய்து, நேற்று சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.

error: Content is protected !!