News April 25, 2024
சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கு

இடஒதுக்கீட்டை அதிகரிக்க INDIA கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் சமூக நீதி மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்த அவர், சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் இடஒதுக்கீட்டிற்கான அச்சுறுத்தலை திராவிட இயக்கம் எதிர்த்து வந்ததாகக் கூறினார். மேலும், இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
Similar News
News September 23, 2025
BREAKING: மழை வெளுத்து வாங்கும்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், செப்.29 வரை மழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. செப்.25, 26, 27-ல் சில மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
News September 23, 2025
பாராசிட்டமால் எடுத்தால் குழந்தைக்கு ஆட்டிசம் வருமா?

கர்ப்பிணிகள் பாராசிட்டமால் மாத்திரைகளை சாப்பிட்டால், பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படலாம் என டிரம்ப் கூறியிருந்தார். இவரது இந்த கூற்றுக்கு தெளிவான ஆதாரம் இல்லை என மருத்துவர்கள் மறுத்துள்ளனர். கர்ப்பிணிகளுக்கு வலி (அ) காய்ச்சல் ஏற்படும்போதும் சிகிச்சை அளிக்காமல் விடுவது ஆபத்தில் முடியும். எனவே டாக்டர்களை கேட்டு பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 23, 2025
துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்கள் பறிமுதல்

கொச்சியில் பிரபல நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். பூட்டான் வழியாக சொகுசு கார்கள் கடத்தி வந்த புகாரில் காலை முதல் நடந்துவந்த சோதனை முடிவில், துல்கர் சல்மானுக்கு சொந்தமான 2 கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் சோதனை தொடர்வதாகவும், பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.