News November 20, 2025

ராணிப்பேட்டை: தலைவர் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது!

image

நவ்லாக் ஊராட்சித் தலைவர் சரஸ்வதி குமார் கொடுத்த புகாரின்பேரில், து.தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சி செயலர் வாசு ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொதுச் செலவு கணக்கு தொடர்பாகத் தகராறு ஏற்பட்டபோது, தலைவியை ஜாதி ரீதியாகத் திட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பணியாளர்களைத் தடுத்ததாகத் தலைவர் கணவர் குமார் மீதும் வழக்கு.

Similar News

News November 21, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் காவல்துறை விவரம் வெளியீடு!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ-21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 21, 2025

ராணிப்பேட்டை: சாம்சங் நிறுவனம் புதிய கல்வி திட்டம்!

image

ராணிப்பேட்டை (ம) காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 10 அரசு பள்ளிகளில் சாம்சங் நிறுவனம் தங்களது சமூகப் பொறுப்பில் இதிலிருந்து “DigiArivu Empowering Students Through Tech” என்ற திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்ய உள்ளனர். இதற்கான புத்துணவு ஒப்பந்த பரிமாற்ற நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார்.

News November 21, 2025

தேசிய தன்னார்வ ரத்த தான தினம்: ஆட்சியர் கௌரவிப்பு!

image

தேசிய தன்னார்வ ரத்த தான தினம் இன்று (நவ.21)ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிக முறை ரத்ததானம் செய்தவர்கள் மற்றும் அதற்கான ஏற்பாடு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அதிக முறை ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

error: Content is protected !!