News November 20, 2025
வேலூர்: ஆட்டை காப்பற்ற உயிரை விட்ட இளைஞர்!

வேலூர்: பேரணாம்பட்டு ஏரிகுத்திமேடு பகுதியை சேர்ந்தவர் முபாரக் (34). இவர் நேற்று (நவ.19) ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த போது, ஒரு ஆடு அங்குள்ள 90 அடி ஆழமுள்ள தரைமட்ட கிணற்றின் ஓரம் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த ஆடு தவறி கிணற்றில் விழுந்து விட கூடாது என்பதற்காக ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட முபாரக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 21, 2025
வேலூர்: 10th தகுதி… மத்திய அரசு வேலை ரெடி

வேலூர் மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 21, 2025
வேலூர்: கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (நவ.21) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News November 21, 2025
வேலூர்: வாக்காளர் கணக்கீடு படிவங்கள் 96% விநியோகம்!

வேலூர் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியல் (SIR) கணக்கீடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் வீடு வீடாக சென்று (SIR) படிவங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 96 சதவீத மக்கள் வரை சென்றுவிட்டதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ள பகுதிகளில் விரைவில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மேலும், பொதுமக்கள் படிவங்களை கவணத்துடன் எழுதவேண்டும் என அறிவுருத்தினர்.


