News April 25, 2024

வாக்காளர்களை மிரட்டிய எம்எல்ஏவுக்கு நோட்டீஸ்

image

வாக்காளர்களை அச்சுறுத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹமீதுல் ரஹ்மானுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்தியப் படைகள் ஏப்ரல் 26-ஆம் தேதி வரைதான் இருக்கும், அதன் பிறகு மாநிலப் படைகள் தான் எப்போதும் இருக்கும் எனத் தேர்தல் பரப்புரையில் அவர் கூறியிருந்தார். இந்த பேச்சு தொடர்பாக அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Similar News

News September 23, 2025

BREAKING: மழை வெளுத்து வாங்கும்

image

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், செப்.29 வரை மழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. செப்.25, 26, 27-ல் சில மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

News September 23, 2025

பாராசிட்டமால் எடுத்தால் குழந்தைக்கு ஆட்டிசம் வருமா?

image

கர்ப்பிணிகள் பாராசிட்டமால் மாத்திரைகளை சாப்பிட்டால், பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படலாம் என டிரம்ப் கூறியிருந்தார். இவரது இந்த கூற்றுக்கு தெளிவான ஆதாரம் இல்லை என மருத்துவர்கள் மறுத்துள்ளனர். கர்ப்பிணிகளுக்கு வலி (அ) காய்ச்சல் ஏற்படும்போதும் சிகிச்சை அளிக்காமல் விடுவது ஆபத்தில் முடியும். எனவே டாக்டர்களை கேட்டு பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 23, 2025

துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்கள் பறிமுதல்

image

கொச்சியில் பிரபல நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். பூட்டான் வழியாக சொகுசு கார்கள் கடத்தி வந்த புகாரில் காலை முதல் நடந்துவந்த சோதனை முடிவில், துல்கர் சல்மானுக்கு சொந்தமான 2 கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் சோதனை தொடர்வதாகவும், பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!