News November 20, 2025
NATIONAL ROUNDUP: ஹாஸ்பிடல் அலட்சியத்தால் குழந்தை பலி

*கொல்கத்தாவில் போலீசார் என சொல்லி மூதாட்டியிடம் ₹78 லட்சத்தை மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். *ராஜஸ்தானில் ஆசிரியரின் துன்புறுத்தலுக்கு ஆளான பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்டான். *லக்னோவில் தனியார் பஸ் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். *பெங்களூரில் அரசு ஹாஸ்பிடலின் கவனக்குறைவால் பிறந்த குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Similar News
News November 22, 2025
பாஜக ‘P’ டீம்: தமிழிசை

தமிழகத்தின் 2026 தேர்தல் பிஹார் தேர்தல் போல இருக்கும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். விஜய், ஸ்டாலின் கூறுவது போல பாஜக ஏ டீம், பி டீ எல்லாம் கிடையாது எனவும் நாங்கள் ’P’ டீம், அதாவது People’s Team என்றும் கூறியுள்ளார். மேலும், வரும் தேர்தலில் பாஜக இரட்டை இலக்க MLA-க்களை பெறும் என்ற அவர், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
மாதவிடாய் தள்ளிப்போகிறதா? சிம்பிள் வைத்தியம்

பெண்களே, மாதவிடாய் சுழற்சி தள்ளிப்போகிறதா? கவலை வேண்டாம். இந்த எளிய விஷயங்களை தொடர்ச்சியாக செய்து வந்தாலே இதனை சரி செய்யலாம். ➤மஞ்சளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் ➤பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் பெறலாம் ➤கொத்தமல்லி இலை, விதைகளை நீரில் கொதிக்க வைத்து கஷாயம் அருந்தலாம் என சித்தா டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்யுங்க!
News November 22, 2025
ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. RBI விளக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் <<18352591>>குறைந்து ₹89.46 ஆக<<>> உள்ளது. இதனால், கச்சா எண்ணெய், எலக்ட்ரானிக்ஸ் போன்ற இறக்குமதி பொருள்களுக்கு அதிக ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். இந்நிலையில், இந்தியாவிடம் போதிய அளவில் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளதாகவும், நாட்டில் நிதிநிலைத்தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.


