News April 25, 2024
ED கைதை எதிா்த்து உச்சநீதிமன்றம் சென்ற சோரன்

ED கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல் செய்துள்ளார். பண மோசடி வழக்கில் ஹேமந்த் சோரனை ED ஜனவரி 31இல் கைது செய்தது. இந்நிலையில் இந்த கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் பிப்ரவரி 26இல் வழக்கை ஒத்திவைத்தது. இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி அவர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்
Similar News
News November 13, 2025
இந்த ஆப்பிள் விலை ₹10 கோடி.. ஆனா சாப்பிட முடியாது!

இது மரத்தில் காய்த்த ஆப்பிள் கிடையாது. மும்பையை சேர்ந்த ரோஹித் பிசால் என்பவரின் கைவண்ணத்தில் உருவானது. தங்கமும் வைரமும் கொண்டு இழைக்கப்பட்டுள்ள இது, தாய்லாந்தின் Royal Palace-ல் வைக்கப்பட்டுள்ளது. 1,936 சிறிய ரக வைர கற்களும், 9 கேரட் & 18 கேரட் தங்கத்தினாலும் இந்த ஆப்பிள் செய்யப்பட்டுள்ளது. வெறும் 29.8 கிராம் தான் என்றாலும், இதை வாங்கும் விலைக்கு கிட்டத்தட்ட 4 BMW கார்களை வாங்கி விடலாம்.
News November 13, 2025
BREAKING: டாஸ்மாக் அறிவித்தது

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு, அதில் தலையிட முடியாது என டாஸ்மாக் நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. TN-ல் 4,787 டாஸ்மாக் கடைகளில், 25,000-க்கும் மேற்பட்டோர் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், வரும் 16-ம் தேதி தலைமைச்செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
News November 13, 2025
பாமக பிரச்னைக்கு இதுதான் தீர்வு: பாமக பாலு

G.K.மணி உள்ளிட்டோர் ராமதாஸை தவறாக வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள் என்று வழக்கறிஞர் பாலு குற்றஞ்சாட்டியுள்ளார். மாம்பழம் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் தரப்பில் எழுதப்பட்ட கடிதத்தில் பல தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், ஜி.கே.மணியும், அருளும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் போதும், பாமகவில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் உடனே முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.


