News November 20, 2025

73 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவு

image

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 73 மனுக்கள் வரப்பெற்றன. இதனை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Similar News

News November 24, 2025

தூத்துக்குடி: மாடு முட்டி தொழிலாளி பலி

image

தூத்துக்குடி கே வி கே நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (43). இவர் ஜாகீர் உசேன் நகரில் உள்ள மாட்டு இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று கடைக்கு வேனில் இருந்து இவர் மாடுகளை இறக்கிக் கொண்டிருந்த பொழுது ஒரு மாடு இவரது வயிற்றில் முட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது பற்றி தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

News November 24, 2025

தூத்துக்குடிக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 24, 2025

தூத்துக்குடி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இன்று தொடர் மழை பெய்து வருவதால் இன்று நடைபெற வேண்டிய மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இதனை எல்லோருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!