News November 20, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (நவ.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News November 20, 2025

சென்னையில் கேள்விக்குறியாகும் பெண்களின் பாதுகாப்பு!

image

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அதேபோல் மருத்துவ மாணவி ஒருவர் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அதே வரிசையில் நின்ற அரசு கார் ஓட்டுநரான விஜயகுமார் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து மயிலாப்பூர் போலீசார் அவரை கைது செய்தனர்.

News November 20, 2025

சென்னையில் ‘டீ’ குடிக்கச் சென்ற பெண்ணுக்கு கொடூரம்!

image

சென்னை மாதவரத்தில் 31 வயது டெலிவரி செய்யும் பெண் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அவரின் தோளைத் தொட்டு, மோசஸ் (எ) அப்பு (25) என்பவர் ஆபாசச் சைகை செய்ததோடு அவரை திட்டி தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் மோசஸ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஏற்கனவே 3 குற்ற வழக்குகள் உள்ள அவர் BNS சட்டத்தின் கீழ் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

News November 19, 2025

இரவு நேர ரயில் சேவை; மீண்டும் தொடங்க கோரிக்கை

image

சென்னை புறநகர் பகுதிகளில், குறிப்பாக மேற்கு மற்றும் வடக்கு ரயில் பாதைகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட இரவு நேர ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ரத்து நடவடிக்கையால் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

error: Content is protected !!