News April 25, 2024

லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (26), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது கொணக்கலவாடி ஏரி அருகே லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் நேற்று (ஏப்ரல்.,23) வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 25, 2025

க.குறிச்சி: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க

image

கள்ளக்குறிச்சி மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04151-294600) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

News August 25, 2025

திருக்கோவிலூர் வருகை தரும் அமைச்சர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பு அருகில் நாளை (26-08-2025) மாலை 5 மணியளவில் விழுப்புரம் தெற்கு மாவட்ட சார்பில் மு.எம்.பி பொன்.கௌதம் சிகாமணி தலைமையில் அண்ணா அறிவகம் (District பிரிவால்) அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும் இந்த நிகழ்வில் வனத்துறை அமைச்சரும் மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான க‌.பொன்முடி கலந்து கொள்ள உள்ளார்.

News August 25, 2025

கள்ளக்குறிச்சி: விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாகவும், தனிநபர் தங்கள் குறைகள் குறித்தும் மனுக்கள் அளித்து பயன்படலாம் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!