News April 25, 2024

திருச்சி அருகே பயங்கர விபத்து; இருவர் மரணம் 

image

மருங்காபுரி அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகபுரம் என்ற இடத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் உயிரிழந்த இருவரின் உடல்களை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை.

Similar News

News February 8, 2026

திருச்சி: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 8, 2026

திருச்சி மாவட்டத்தில் 16 பேருக்கு தொழுநோய்

image

திருச்சி மாவட்டத்தில் தொழுநோய் கண்டறியும் 2-ம் கட்ட சிறப்பு முகாம், கடந்த ஜன.16ம் தேதி தொடங்கி பிப்.6ம் தேதி வரை நடைபெற்றது. இதில் சுகாதாரப் பணியாளர்கள், வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர். மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 16 பேருக்கு தொழுநோய் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

News February 8, 2026

மோசமான வானிலை – திருச்சியில் இறக்கப்பட்ட விமானம்

image

கோலாலம்பூரில் இருந்து 125 பயணிகளுடன் இன்று காலை சென்னை செல்லும் ஏர் ஏசியா விமானம், சென்னையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக திருச்சி விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதுடன், பயணிகள் அனைவரும் அங்கிருந்து வாகனம் மூலம் சென்னை மற்றும் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

error: Content is protected !!