News November 19, 2025
நாகை: 4-வது நாளாக தொடரும் தடை!

நாகை மாவட்டத்தில் கனமழை மற்றும் கடல் காற்றின் வேகம் அதிகரிப்பின் காரணமாக 4-ஆவது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக நாளொன்றுக்கு ரூ.5 கோடி அளவுக்கு மீன்பிடி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
நாகை: ரயில்வேயில் கொட்டி கிடக்கும் வேலை!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 5810 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 27.11.2025
4. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 21, 2025
நாகை: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு!

நாகை மக்களே, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் ‘9444123456’ என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 21, 2025
நாகை மாவட்டத்தில் 13.8 செ.மீ மழை பதிவு

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்பொழுது மழையின்றி மந்தமான வானிலை நிலவி வருகிறது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரங்கள்: நாகப்பட்டினம் 3.6 செ.மீ, திருப்பூண்டி 1.9 செ.மீ, வேளாங்கண்ணி 2.4 செ.மீ, திருக்குவளை 0.7 செ.மீ, தலைஞாயிறு 2.6 செ.மீ, வேதாரண்யம் 1.2 செ.மீ, கோடியக்கரை 1.0 செ.மீ என நாகை மாவட்டம் முழுவதும் மொத்தம் 13.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


