News November 19, 2025
வேலூர்: கஞ்சா கடத்திய சிறை கைதிகள்

திருவண்ணாமலையை சேர்ந்த மணிகண்டன் (28), மதன்குமார் (26) 2 பேரும் வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். 2 பேரையும் விசாரணைக்காக திருவண்ணாமலை கோர்ட்டுக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றனர். மீண்டும் சிறைக்கு வந்த போது சிறை நுழைவு வாயிலில் இருவரையும் சிறைகாவலர்கள் சோதனை செய்தனர். கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
Similar News
News November 24, 2025
வேலூர்: ஆட்டோ மீது கார் மோதி விபத்து – பெண் பலி

வேலூர்: வல்லண்டராமம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு (நவ.23) முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. ஆட்டோவில் பயணம் செய்த ஜெயந்தி (54) என்பவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 24, 2025
வேலூர்: ஆட்டோ மீது கார் மோதி விபத்து – பெண் பலி

வேலூர்: வல்லண்டராமம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு (நவ.23) முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. ஆட்டோவில் பயணம் செய்த ஜெயந்தி (54) என்பவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 24, 2025
வேலூர்: இளம்பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில்!

வேலூர்: காட்பாடி தாராபடவேட்டில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடப்பதாக காட்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று (நவ.23) மாலை அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்ட போலீசார், பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வசந்தா (52), சந்திரசேகரன் (41) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


