News November 19, 2025
புதுச்சேரி: சாலையை ஆக்கிரமித்து பேனர்-போலீசார் வழக்கு பதிவு

புதுச்சேரி – கடலூர் சாலை, கிருமாம்பாக்கம் சந்திப்பு பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாகச் சாலை மற்றும் நடை பாதையை ஆக்கிரமித்து, கொடிக்கம்பம், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு உதவிப் பொறியாளர், கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 16, 2026
புதுச்சேரி: 3 நாட்கள் நடந்த சர்வதேச மருத்துவ மாநாடு

புதுச்சேரி ஜிப்மரில் (JIPMER) ‘Connaissance – 8th Edition’ என்ற தலைப்பில் 3 நாட்கள் சர்வதேச இளங்கலை மருத்துவ மாணவர்கள் மாநாடு நடைபெற்றது. ரிஷிகேஷ் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மீனு சிங் தலைமை தாங்கினார். ஜிப்மர் இயக்குநர் வீர்சிங் நேகி வாழ்த்திப் பேசினார். இதில் இந்தியா முழுவதும் உள்ள 200 மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 2500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
News March 16, 2026
காரைக்காலில் மதுபான கடைகளுக்கு கட்டுப்பாடு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் மதுக்கடைகள் மற்றும் மதுபானங்கள் எடுத்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கள் கடைகள், சாராயக் கடைகள், மதுபான கடைகள் ஆகியவை தினமும் இரவு 10.00 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்று காரைக்கால் துணை ஆணையர் பூஜா அறிவித்துள்ளார்.
News March 16, 2026
புதுச்சேரி: தேர்வு கிடையாது – மத்திய அரசு பணி வாய்ப்பு

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 245 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள் <


