News April 25, 2024

மதுரையில் வணிகர்களுக்கு அதிரடி உத்தரவு

image

மக்களவைத் தோ்தல் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவையொட்டி, மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தொழிலாளா் நலத் துறையின் உதவி ஆணையா் மு.காா்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் விடுப்பு வழங்காத நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக 94453 98761, 99425 41411மற்றும், 0452 2604388 என்ற தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.

Similar News

News July 7, 2025

மீனாட்சி அம்மன் கோவில் ஆனி பொன்னூஞ்சல் உற்சவ விழா

image

உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சியை சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆணி பொன்னூஞ்சல் உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் பிரியாவிடையுடன் எழுந்தருளி கோவிலில் வலம் வந்து பொன்னூஞ்சல் உற்சவத்தில் ஊஞ்சலாடினர். ஏராளமான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் குடும்பத்தினருடன் வருகை புரிந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

News July 6, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (06.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 6, 2025

அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் விசாரணை – எஸ்.பி உத்தரவு

image

அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் மற்றும் யுவராஜ் ஆகியோர் வழக்கு ஒன்றுக்காக அலங்காநல்லூர் காவல்நிலையம் வந்தபோது, காவலர்களால் தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் மாவட்ட காவல்துறை எஸ்.பி உத்தரவின் பேரில் சமயநல்லூர் டி.எஸ்.பி விசாரணை மேற்கொள்வார் என பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!