News November 19, 2025
காஞ்சி: தாய் கண் எதிரே மகன்கள் கொடூர பலி!

காஞ்சிபுரம் அடுத்த கீழ்அம்பி ஆதிதிராவிடர் காலணியைச் சேர்ந்த குளோரி, அவரது மகன்களான யுவராஜ், (18) சந்தோஷ், (16) ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு 7 மணியளவில் கீழ்அம்பி பகுதியில் உள்ள சந்தையில் காய்கறிகள் வாங்கிவிட்டு ஒரே வாகனத்தில் சென்றுள்ளனர். இந்நிலையில், சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் யுவராஜ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
Similar News
News March 13, 2026
காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச்.12) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.
News March 12, 2026
காஞ்சி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

காஞ்சிபுரம் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
News March 12, 2026
காஞ்சி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


