News November 19, 2025
திருவாரூர்: மக்கள் பாதுகாப்பாக அறிவுறுத்தல்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று (நவம்பர் 19) திருவாரூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News March 13, 2026
திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி

மருத்துவ காப்பீட்டு தொகையை முழுமையாக வழங்காத United India Insurance Company மீது மண்ணை நுகர்வோர் சங்கம் தொடரப்பட்ட 4 வழக்குகளில் பாதிக்கப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு இழப்பீடு வழங்க திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வழங்க வேண்டிய காப்பீட்டு தொகையை 9% ஆண்டு வட்டியுடன், மேலும் ரூ.50,000 இழப்பீடு மற்றும் ரூ.10,000 வழக்கு செலவு வழங்க வேண்டும் என்று ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
News March 13, 2026
தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் மூலம் அமைக்கப்படும் கண்காணிப்புக் குழுக்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில் அரசு அலுவலர்கள் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News March 13, 2026
திருவாரூர்: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை!

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: அதிகபட்சம் 45 வயது
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: B.E / B.Tech, MCA
6. கடைசி தேதி: 23.03.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


