News April 25, 2024
திருச்சியில் வெப்ப அலை வீசும், கலெக்டர் எச்சரிக்கை,

திருச்சியில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர்,திருச்சி,அரியலூர் மாவட்டங்களில் நேற்றும் இன்றும் வெப்ப அலை வீசக் கூடும் . எனவே பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து பகல் 12 மணிக்கு மேல் வெளியில் செல்ல வேண்டாம் என்று திருச்சி மாவட்ட மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 7, 2025
திருச்சி: காய்கறி விதைகளுக்கு 75 % மானியம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தினை அதிகரிக்க, 75 % மானியத்தில், ரூ.7,500 மதிப்புள்ள காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. இதற்காக பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகலாம் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
News July 7, 2025
திருச்சி: வங்கியில் வேலை! மாதம் ரூ.85,000 சம்பளம்

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் திருச்சி உட்பட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <
News July 7, 2025
திருச்சி: தபால் நிலையத்தில் மொபைல் சார்ஜிங் வசதி அறிமுகம்

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையத்தில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தலைமை தபால் நிலையத்தில் “மொபைல் சார்ஜிங் நிலையம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இணைப்புகள் கொண்ட இந்த மொபைல் சார்ஜிங் நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மண்டல பொது மேலாளர் நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.