News November 19, 2025
இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 17, 2026
மருக்களை ஒரே வாரத்தில் உதிர வைக்கும் வீட்டு வைத்தியம்

உடம்பு (அ) முகத்தில் இருக்கும் மருக்கள் உங்கள் அழகை குறைக்கிறதா? கவலையை விடுங்க. பூண்டை வைத்தே இந்த மருக்களை அகற்றலாம் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். இதற்கு, ஒரு பூண்டு பல்லை நசுக்கி, மருக்கள் மீது தடவி, அதனை பஞ்சை வைத்து மூடுங்கள். இதை தினமும் செய்து வந்தால், மருக்கள் கருப்பாகி 7 – 10 நாள்களுக்குள் உதிர்ந்து போகும் என்கின்றனர். இந்த வீட்டு வைத்தியத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
News March 17, 2026
அழுத்தங்களால் கீழடியில் அகழ்வாராய்ச்சி: CM

தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது என தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், நிறுத்தி வைத்துள்ள கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசை வெளியிட வைப்போம் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
News March 17, 2026
BREAKING: விஜய் உடன் இணைய முடிவெடுத்தார்

புதுச்சேரி மாநில அரசியல் களத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு, பாஜகவின் அழுத்தம் காரணமாக NDA கூட்டணியிலிருந்து <<19405426>>வெளியேற NR காங்கிரஸ் முடிவு<<>> செய்துள்ளதாக காலையில் செய்தி வெளியானது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது, NR காங்கிரஸுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பாஜக தரப்பு அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.


