News April 25, 2024
3 மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம்

வெப்ப அலை காரணமாக நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று வேலூர், சேலம், நாமக்கல் ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பொதுமக்கள் அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News January 12, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 578 ▶குறள்: கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு. ▶பொருள்:கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.
News January 12, 2026
இந்தியாவுக்கு அடுத்த பின்னடைவு.. சுந்தர் OUT!

NZ-க்கு எதிரான நேற்றைய முதல் ODI-ல் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு காயம் ஏற்பட்டது. 20-வது ஓவர் வீசிய போது காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறிய அவர், பேட்டிங் செய்யும் போதும் ரன் ஓட முடியாமல் திணறினார். இந்நிலையில், மீதமுள்ள 2 போட்டிகளில் இருந்தும் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, காயம் காரணமாக <<18824015>>பண்ட்<<>> விடுவிக்கப்பட்டார்.
News January 12, 2026
இந்தியாவை பாதுகாக்கும் அரண் PM மோடி: அம்பானி

கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் நிலையிலும், நம்மை பாதுகாக்கும் ஒரு அரணாக PM மோடி இருப்பதாக அம்பானி தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியா வரலாற்றில் இத்தகைய ஒரு தன்னம்பிக்கையையும், ஆற்றலையும் முன்னெப்போதும் பார்த்ததில்லை. அடுத்த 50 ஆண்டுகளுக்கான இந்தியாவின் பாதையை அவர் வடிவமைத்துள்ளார். மோடி சகாப்தத்தை வரலாறு பதிவு செய்யும் என்றும் அம்பானி தெரிவித்துள்ளார்.


