News November 19, 2025

கடலூர்: மனைவி திட்டியதால் தற்கொலை

image

பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பிரபாகரன் (35). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததால் பிரபாகரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பிரபாகரன் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News March 8, 2026

கடலூர்: ரூ.1.11 கோடி மோசடி – குற்றவாளி கைது

image

களையூர் பகுதியை சேர்ந்த ரஞ்சனி (36) என்பவரிடம் தட்டாஞ்சாவடியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பணம் கொடுத்தால் அதனை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, ரூ.36 லட்சம் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பலரிடம் ரூ.1.11 பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். SHARE பண்ணுங்க!

News March 8, 2026

கடலூர்: சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத சடலம்

image

கடலூர் முதுநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஊர் பெயர் தெரியாத சுமார் (70) வயது மதிக்கத்தக்க முதியவர். கடந்த மார்ச் 5ஆம் தேதி, பூண்டியாங்குப்பம் நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் இறந்து விட்டார். இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் முதுநகர் காவல் நிலையத்திற்கு 9944661847, 9498100555 என்ற செல்பேசி எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு, இன்று முதுநகர் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

News March 7, 2026

கடலூர்: சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் – எஸ்.பி

image

கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு, சட்ட அலுவல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆலோசனை வழங்க சட்ட ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சட்டப் பட்டப்படிப்பு முடித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்து, 5 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் வரும் மார்ச் 20-க்குள் கடலூர் எஸ்.பி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!