News April 25, 2024

3 நாள்களுக்கு பிறகு ராகுல் இன்று பரப்புரை

image

3 நாள்களுக்கு பிறகு ராகுல் காந்தி இன்று மீண்டும் பரப்புரையில் ஈடுபட உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 3 நாள்களாக ராகுல் காந்தி தேர்தல் பரப்புரைகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார். அமராவதி தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிற்பகல் 12.30 மணிக்கும், சோலாப்பூரில் நடைபெறும் கூட்டத்தில் பிற்பகல் 3.30 மணிக்கும் அவர் உரையாற்ற உள்ளார்.

Similar News

News January 16, 2026

இன்று இந்த விளக்கு ஏற்றுங்க.. செல்வ செழிப்பு பெருகும்!

image

மாட்டுப் பொங்கலில் பசு மாடு இல்லாதவர்கள், பஞ்ச காவிய விளக்கு ஏற்றும்படி ஆன்மீகவாதிகள் அறிவுறுத்துகின்றனர். பசுவின் நெய், பால், சாணம், தயிர், கோமியம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுவதே பஞ்ச காவிய விளக்கு. இந்த விளக்கை ஏற்றி வழிபாட்டால், செல்வ செழிப்பு பெருகுமாம். அதேபோல, எங்கேனும் பசுக்களை பார்த்தால், ஏதேனும் ஒரு உணவுப் பொருளை வாங்கி கொடுங்கள். இது 30 முக்கோடி தேவர்களின் அருளையும் பெற்றுத் தரும்.

News January 16, 2026

ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க விரைந்தார் உதயநிதி!

image

மதுரை, பாலமேட்டில் இன்னும் சற்றுநேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்க உள்ளது. இதனை DCM உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக காலையிலேயே எழுந்து தயாரான அவர், வாடிவாசலுக்கு விரைந்துள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் போட்டியானது தொடங்க உள்ளது. இன்று 1,000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் வாடிவாசலில் களம் காண காத்திருக்கின்றனர். சிறந்த காளைக்கு டிராக்டர், சிறந்த வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.

News January 16, 2026

BREAKING: முதல்வர் ஸ்டாலினின் 4 புதிய வாக்குறுதிகள்

image

திருவள்ளுவர் தினமான இன்று, தமிழக மக்களுக்கு 4 புதிய வாக்குறுதிகளை அளிப்பதாக CM ஸ்டாலின் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். *சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல். *வறியோர் எளியோர் வாழ்வுயுர மனிதநேயத் திட்டங்கள். *இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள். *தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!