News April 25, 2024

கோவை: பாதிக்கப்பட்டவரை மிரட்டியவர்கள் கைது

image

பாலியல் வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த கார்த்திக், ஆட்டோ மணி, மணிகண்டன் உள்ளிட்ட 7 பேரை ஆர்எஸ் புரம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை தங்களுக்கு சாதகமாக சாட்சி சொல்ல கூறி மூவரும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரில் மேற்கண்ட மூவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.

Similar News

News September 27, 2025

கோவையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

image

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (20). இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து துடியலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 26, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (26.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 26, 2025

கோவையில் 2 நாள் சிறப்பு வரி வசூல் முகாம்

image

2025-2026 முதலாம் அரையாண்டு வரை கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகிய வரியினங்களை பொதுமக்கள் செலுத்த சிறப்பு வரிவசூல் முகாம்கள் கோவையில் அனைத்து மண்டலங்களிலும் வரும் 27,28 ஆகிய 2 நாட்களில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் இன்று கேட்டுக் கொண்டுள்ளது. 

error: Content is protected !!