News November 19, 2025
தூத்துக்குடி கலெக்டர் பரபரப்பு உத்தரவு!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஒரு தொலைபேசி வழி செய்தியை அவசரமாக வழங்கியுள்ளார். அதன்படி வரும் 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்ய உள்ளதால் பல்வேறு அவசரகால பொருட்களை தயார் நிலையில் வைத்திடவும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யவும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 14, 2026
காச்சிகுடா – தூத்துக்குடிக்கு ஏப்ரல் 6 முதல் விரைவு ரயில்

காச்சிகுடா – தூத்துக்குடி இடையே புதிய விரைவு ரயில் ஏப்.6 முதல் இயங்கும். சிறப்பு ரயில் (07191/07192) நிரந்தரமாகி, தூத்துக்குடி வரை நீட்டிப்பு. காச்சிகுடா திங்கள் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய் இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடி வரும். தூத்துக்குடியில் புதன் காலை 7.40 க்கு புறப்பட்டு வியாழன் மதியம் 1.25 காச்சிகுடா வந்தடையும். (வாரம் ஒருமுறை) இதனால தென் தமிழக – தெலங்கானா பயணம் எளிதாகும்.
News March 14, 2026
தூத்துக்குடி: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..
News March 14, 2026
தூத்துக்குடி: டிரைவர் விஷம் குடித்து தற்கொலை.!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே சிவத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் (32) என்பவர், டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டில் நடந்த குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று, அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


