News November 19, 2025
ஈரோடு: ரூ.85,000 வரை சம்பளம்.. அரசு வேலை!

ஈரோடு மக்களே, டிகிரி முடித்து வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பிற்கு https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் மூலம் வரும் நவ.23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். யாருக்காவது பயன்படும் அதிகமாக SHARE பண்ணுங்க!
Similar News
News March 5, 2026
ஈரோடு மாவட்டம் 3-ம் இடம் பிடித்து சாதனை!

மத்திய அரசின் 2025-26 கல்வி ஆண்டுக்கான இன்ஸ்பயர் விருது பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 2,336 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 97 மாணவர்கள் இடம் பெற்று மாநில அளவில் 3-ம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக 45 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வாகி தனியார் பள்ளிக்கு இணையான புத்தாக்க சிந்தனையை நிரூபித்துள்ளதாக மாவட்ட கலெக்டர் கந்தசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
News March 5, 2026
ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (மார்ச்.04) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 4, 2026
ஈரோடு: GAS BILL-ஐ விட அதிக பணமா? இத பண்ணுங்க!

ஈரோடு மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.


