News November 19, 2025
திருவாரூர்: மக்கள் பாதுகாப்பாக அறிவுறுத்தல்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று (நவம்பர் 19) திருவாரூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News March 6, 2026
திருவாரூர் மக்களே இன்று இதை மறக்காதீங்க!

திருவாரூர் மக்களே இன்று காலை 8:24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5:30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
News March 6, 2026
திருவாரூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

திருவாரூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 6, 2026
திருவாரூர்: மகன் கழுத்தை அறுத்து கொன்ற தந்தை!

பேரளம் அருகே உள்ள கடகம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (26). இவர் சம்பவத்தன்று கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் சடலமாக இருந்துள்ளார். இது குறித்து அவரது தந்தை மனோகரன் (54) பேரளம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில், மனோகரனே தனது மகன் அய்யப்பனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, நாடகமாடியது தெரியவந்தது. இதனை அடுத்து தற்போது மனோகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.


