News November 19, 2025
இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 12, 2026
ராமதாஸ் வழக்கிற்கு இடைக்கால தடை

கட்சி(பாமக) உரிமை தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு சென்னை HC இடைக்கால தடை விதித்துள்ளது. கட்சி பெயர், சின்னம் பயன்படுத்துவதை எதிர்த்து அன்புமணிக்கு எதிராக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்து HC-ல் பாமகவின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
Induction Stove-வுக்கு அதிகரித்த டிமாண்ட்.. No Stock!

கேஸ் சிலிண்டர் பற்றாக்குறையை அடுத்து, இண்டக்ஷன் ஸ்டவ் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பிளிங்கிட், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவற்றில் 2-3 நாட்களாக ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. பிளிப்கார்ட்டில் மட்டும் விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளது. பல தளங்களில் இப்போது இண்டக்ஷன் ஸ்டவ் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகளிலும் இதே நிலைதான் உள்ளதாம்.
News March 12, 2026
அடுத்து இந்த பொருளுக்குதான் தட்டுப்பாடு வரப்போகுது!

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், விரைவில் உர விநியோகத்திலும் தட்டுப்பாடு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இந்தியாவின் உர தேவையில் 20- 25% ஹார்முஸ் கடல் பாதை வழியாகதான் இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, நைட்ரஜன் உரங்களில் 63%, பொட்டாஷ் உரங்களில் 42% மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துதான் வருகிறதாம். இருப்பினும், தற்போது போதுமான அளவு உரக் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


