News November 19, 2025
விருதுநகர்: 15 பேரை கடித்த தெரு நாய்கள்

காரியாபட்டி ஆவியூரில் நவ.17-ல் 3 தெருநாய்கள் கடித்ததில் மணிகண்டன், தங்கப்பாண்டி, தனலட்சுமி, ஆறுமுக கணபதி, கருப்பையா என 15 பேர் பலத்த காயம் அடைந்து விருதுநகர் GH-ல் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து, நேற்று ஊராட்சி நிர்வாகம் அப்பகுதியில் வெறி பிடித்த 58 நாய்களை பிடித்தது நாய்கள் காப்பகத்தில் விட்டது. மேலும் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News March 28, 2026
BREAKING விருதுநகர் வேட்பாளர்கள் அறிவிப்பு

விருதுநகர் மாவட்ட வேட்பாளர்கள் பட்டியலை சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
1.திருச்சுழி – தங்கம் தென்னரசு MLA
2.அருப்புக்கோட்டை – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் MLA
3.சாத்தூர் – அ.கடற்கரை ராஜ்
4.ராஜபாளையம் – சௌ.தங்கப்பாண்டியன் MLA
5.சிவகாசி – காங்கிரஸ் (ஒதுக்கீடு)
6.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (ஒதுக்கீடு)
7.விருதுநகர் – தேமுதிக (ஒதுக்கீடு)
News March 28, 2026
விருதுநகர்: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

விருதுநகர் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, Aadhar FaceRD செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.
News March 28, 2026
சாத்தூர்: ரூ.11.53 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு

சாத்தூர் அருகே ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி(62). இவரிடம் தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் – புவனேஸ்வரி தம்பதி ரூ.11.54 லட்சத்திற்கு வீட்டுமனையை விற்பனை செய்து பத்திரபதிவு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தியதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சாத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் நீதிபதி அளித்த உத்தரவின் பேரில் 2 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.


