News November 19, 2025
UPI-ல் கடன் வழங்க தயாராகும் தனியார் வங்கிகள்

தற்போது UPI வாயிலாக மூன்றாம் தரப்பு செயலிகள் கடன் வழங்கி வருகின்றன. இதன் வட்டிவிகிதம், வங்கிகளை விட அதிகமாகும். இந்நிலையில், தனியார் வங்கிகள் UPI மூலம் கடன் வழங்கும் சேவையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆக்ஸிஸ், கோடக் மஹிந்திரா, HDFC உள்ளிட்ட வங்கிகள் நவி, சூப்பர்மனி போன்ற நிதி தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து, கடன் திட்டங்களை வழங்க ஆயத்தமாகி வருகின்றன.
Similar News
News March 14, 2026
சமையல் எண்ணெய் விலை உயர்ந்தது!

போர் சூழல் காரணாக சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ₹110-க்கு விற்பனையான 1 லிட்டர் பாமாயில் தற்போது ₹122 ஆக உயர்ந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் ₹155லிருந்து ₹175 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விலையும் லிட்டருக்கு ₹5 வரை உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News March 14, 2026
ஈரானின் கிரீடத்தில் மிகப்பெரிய தாக்குதல்

மத்திய கிழக்கு வரலாற்றில் ஈரானின் கிரீடமாக கருதப்படும் கார்க் தீவில் சக்திவாய்ந்த குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். கார்க் தீவில் உள்ள ஈரானின் ராணுவ நிலைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டதாக கூறிய அவர், அங்குள்ள எண்ணெய் கட்டமைப்பை அழிக்க விரும்பவில்லை; ஆனால், கப்பல்கள் செல்வது தடுக்கப்பட்டால், அதையும் அழிப்பேன் என்று எச்சரித்துள்ளார்.
News March 14, 2026
அதிமுகவை பாஜக கபளீகரம் செய்யும்: உதயநிதி

பிஹாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலையே EPS-க்கும் ஏற்படும் என உதயநிதி கூறியுள்ளார். 10 முறை CM ஆக இருந்த நிதிஷ்குமாரையே தற்போது ராஜ்யசபா MP ஆக மாற்றி, அம்மாநில ஆட்சியை பாஜக தன்வசமாக்கிவிட்டது என்ற அவர், இதேபோல் தான், 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று குறிப்பிட்டார்.


