News November 19, 2025

அட்ஜஸ்ட்மென்ட் சர்ச்சை: நடிகை மான்யா ஆனந்த் முற்றுப்புள்ளி

image

தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் எனக் கூறி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு <<18320110>>அட்ஜஸ்மென்ட்<<>> பற்றி பேசியதாகவும், அவர் போலியாக இருக்கலாம் என்று தான் கூறியதாகவும் நடிகை மான்யா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். இதனால், 2 நாள்களாக கோலிவுட் சினிமாவில் சுற்றி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, <<18324641>>நடிகர் தனுஷ்<<>> தரப்பும் இதனை முற்றிலுமாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 15, 2026

வங்கி கணக்கில் மேலும் ₹3,000.. ஸ்டாலின் மகிழ்ச்சி அறிவிப்பு

image

பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை ₹12,000-ல் இருந்து ₹15,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக அரசாணை வெளியாகியுள்ளது. அதில், பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கான ஓய்வூதியமும் ₹6,000-ல் இருந்து ₹7,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வீட்டு வசதி வாரியத்தில் அவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE IT

News March 15, 2026

தேர்தல் அறிவிப்பு.. ரயில் டிக்கெட்கள் காலி

image

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என ECI அறிவித்துள்ளது. இதையடுத்து, வாக்களிப்பதற்கு சொந்த ஊர் செல்வதற்காக பலரும் IRCTC-ல் டிக்கெட் புக் செய்து வருகின்றனர். குறிப்பாக ஏப்.21, ஏப்.22 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்கான டிக்கெட்கள் கடகடவென காலியாகி வருகின்றன. டிக்கெட் புக் செய்யாதவர்களே முந்துங்க..

News March 15, 2026

கேரளாவில் ஏப்.9-ல் வாக்குப்பதிவு

image

TN, புதுச்சேரியை போல அண்டை மாநிலமான கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. 140 தொகுதிகள் கொண்ட கேரளாவில் ஏப்.9-ல் வாக்குப்பதிவும், மே.4-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. 126 தொகுதிகள் கொண்ட அசாமில் ஏப்.9-ல் வாக்குப்பதிவும், மே.4-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!