News November 19, 2025
நாகை: 4-வது நாளாக தொடரும் தடை!

நாகை மாவட்டத்தில் கனமழை மற்றும் கடல் காற்றின் வேகம் அதிகரிப்பின் காரணமாக 4-ஆவது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக நாளொன்றுக்கு ரூ.5 கோடி அளவுக்கு மீன்பிடி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 14, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் 2026 – ஐ முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நாகை மாவட்டத்தில், ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தோ்தல் கண்காணிப்புக் குழுக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
News March 14, 2026
மகிழ்ச்சியில் மிதக்கும் நாகை மக்கள்; இதோ அறிவிப்பு!

எா்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே புதிய வாராந்திர விரைவு ரயில் (16363) எா்ணாகுளத்திலிருந்து மாா்ச் 18 ஆம் தேதி முதல் புதன்கிழமைகளிலும், 16364 வேளாங்கண்ணி – எா்ணாகுளம் விரைவு ரயில் (16364) வேளாங்கண்ணியிலிருந்து மாா்ச் 19 ஆம் தேதி முதல் வியாழக்கிழமைகளிலும் இயக்கப்படவுள்ளது. இதன் மூலம் நாகை, திருவாரூா் மற்றும் காரைக்கால் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
News March 14, 2026
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 13) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


